ஜனாதிபதி அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும்!

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு முடியாது. அதனால் கட்சியின் வருடாந்த சம்மேளனம் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற செய்தியை நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம்.

அவ்வாறு சுதந்திர கட்சி வெளியேறாவிட்டால் தற்போது கட்சியில் இருப்பவர்களும் கட்சியில் இருந்து நீங்கிக்கொள்வார்கள்“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.