செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் இதை செய்யுங்கள்!

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும், செய்யக்கூடாதவைகளையும் பற்றி பார்ப்போம்.

பரிகாரம் செய்யவேண்டிய நேரம்

சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும்.

குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

பரிகாரம் செய்யகூடாத நேரம்

ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.

பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது.

மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

செவ்வாய் தோஷம் போக்க

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.

செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற்கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.

செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும்.

செவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.