பிரான்சிலிருந்து நான்காம் நாளில் மனிதநேய ஈருருளிப் பயணம் ஐ.நா.நோக்கி!

மனிதநேய ஈருருளிப் பயணம் நான்காம் நாளில் வரலாற்று முக்கியம் வாய்ந்த நகரங்கள் ஊடாக பயணிக்கின்றது!தியாக தீபம் திலீபனின் 31 வது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம இன்று 06.09.2018 வியாழக்கிழமை நான்காவது நாளாக troyes நகரில் இருந்து தொடர்கின்றது.
அங்கு முதலாம் இரண்டாம் மகா யுத்தத்தில் மரணித்த படையினர், பொதுமக்கள் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபியின் முன்னால் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கூடாக Vitry le Franois நகரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.