இது விடுதலைக்கான போராட்டம் - பன்வழி ஊடாக ஐநா நோக்கிய போராட்டங்கள்!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இன்றைய தினம் யேர்மனிக்கு வந்தடைந்தது. இன்று காலை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் மனிதநேய ஈருருளிப் பயணத்தை சார்புருக்கன் வரவேற்று தமது பராமரிப்பில் ஆதரவு அளித்தார்கள்.நாளைய தினம் காலை 9 மணிக்கு சார்புருக்கன் நகரபிதா மனிதநேய ஈருருளிப் பயணத்தை வரவேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று 09/09/2018 ஞாயிறு காலை நான்சி என்னும் நகரை அண்மித்து சென்றது. உலக யுத்தங்களில் தமது நாட்டுக்கா போராடி உயிர்நீத்த வீர்களின் கல்லறைகளை தாண்டி சென்றிருந்தனர்.
எதிர்வரும் 11.9.2018 அன்று பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மற்றும் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணமும் ஸ்ட்றாஸ்புர்க் நகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஒன்று கூடலில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இன்றைய தினம் ஜநா நோக்கிய நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணத்தின் முதலாவது கண்காட்சியும் பரப்புரையும் பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் வேற்றின மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டதுடன் தமிழ் மக்களுக்கான தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்கள். அத்தோடு கண்காட்சியை விளக்கும் வகையில் ஒலி வடிவத்தில் பல்வேறு மொழிகளில் விளக்க உரைகளும் இணைக்கப்பட்டது.
நாளைய தினம் நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணம் சுவீடன் நாட்டில் தனது பணியை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.