யாழ் கொடிகாமம் பொலிஸார் வாகனம் ஒன்றை இனம்தெரியாத குழு கடத்தல்!
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை அடையாளம் தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த போது, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து தென்மராட்சிப் பிரதேசத்துக்கு அதிகளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுட்டுள்ளது.
இந்நிலையில், வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#jaffna #kodikamam #srilanka #tamilnews police
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த போது, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து தென்மராட்சிப் பிரதேசத்துக்கு அதிகளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுட்டுள்ளது.
இந்நிலையில், வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#jaffna #kodikamam #srilanka #tamilnews police
கருத்துகள் இல்லை