கொடிகாமம் பேருந்து நிலையம் – ஏ9 வீதியுடன் இருக்க வேண்டும்!
கொடிகாமம் பொதுச்சந்தை புதிய மாதிரிப் பொதுச் சந்தையாக அமைக்கும்போது கொடிகாமம் பேருந்து நிலையத்தை ஏ9 முதன்மைச் சாலையுடன் இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்படல் வேண்டும்’ கொடிகாமம் பொதுச் சந்தையை புதிய வடிவில் அமைப்பதற்கென உருவாக்கப்பட்ட வரைபடத்தை இறுதியாக்குவது தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், உறுப்பினர்கள், அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
‘கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொடிகாமம் சந்தை அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருவதால் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கடைத் தொகுதிகள் சந்தை விற்பனைப் பிரிவுகள் போன்றவை அமைக்கப்படல் வேண்டும்.
இவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக்க தற்போது கொடிகாமம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு சந்தையின் தேங்காய் விற்பனைப் பிரிவு மற்றும் கடலுணவுகள் விற்பனைப் பிரிவுகளை மாற்றி பேருந்து நிலையத்தை ஏ- 9 முதன்மைச் சாலையுடன் இணைந்த நிலையில் அமைக்கப்படுவது கட்டாயமாக உள்ளது’ என கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்தவர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மக்களின் ஆலோசைனகள் கருத்தில் எடுக்கப்பட்டு சந்தை அமைக்கப்படுமென தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.
பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், உறுப்பினர்கள், அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
‘கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொடிகாமம் சந்தை அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருவதால் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கடைத் தொகுதிகள் சந்தை விற்பனைப் பிரிவுகள் போன்றவை அமைக்கப்படல் வேண்டும்.
இவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக்க தற்போது கொடிகாமம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு சந்தையின் தேங்காய் விற்பனைப் பிரிவு மற்றும் கடலுணவுகள் விற்பனைப் பிரிவுகளை மாற்றி பேருந்து நிலையத்தை ஏ- 9 முதன்மைச் சாலையுடன் இணைந்த நிலையில் அமைக்கப்படுவது கட்டாயமாக உள்ளது’ என கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்தவர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மக்களின் ஆலோசைனகள் கருத்தில் எடுக்கப்பட்டு சந்தை அமைக்கப்படுமென தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை