போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இடமளியோம் -ரெலோ
போர்க் குற்றவாளிகளை, அரசியல் கைதிகளுடன் இணைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளார்.
இந்த விடயத்தில் எந்தப் பேரத்துக்கும் தமிழர் தரப்புத் தயாராக இல்லை. போர்க் குற்றவாளி களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது வெறும் பகல் கனவே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இதைக் கூறுகின்றேன்.
இவ்வாறு ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
ரெலோ அமைப்பின் மத்திய குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வை.எம்.சி. மண்டபத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,
–
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உள்நாட்டிலும், புலம்பெர் நாட்டுத் தரப்புகளாலும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக இந்தப் பிரச்சினை தீவிர நிலையை எட்டியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த போரில் இராணுவத்தாலும், துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக, மனித உரிமைகளுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்று கூறப்படும் போர் குற்றவாளிகளையும், அரசியல் கைதிகளையும் இணைத்து ஒரு யோசனையை மைத்திரிபால சிறிசேன முன்வைக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத் தேவை எமக்கு உள்ளது.
நாம் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த விடயத்தில் நாம் எந்தச் சமரசத்துக்கும் போகமாட்டோம். மிகவும் கெட்டித்தனமாக – இராஜதந்திர ரீதியில் போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசு இந்த யோசனையை முன்வைக்கும்போது தமிழ் இனம் முழுமூச்சாக அதை எதிர்க்கும்.
போர்க் குற்ற விசாரணை நடந்தேயாக வேண்டும்.நாம் அரசமைப்புத் திருத்தத்திலும் பல முக்கிய விடயங்களை வலியுறுத்தி வருகின்றோம். வடக்கு, கிழக்கு சுயாட்சி, உயர் அதிகாரங்கள் என்பவற்றைக் கோருகின்றோம். சம உரிமையுடனான தீர்வை வலியுறுத்துகின்றோம். நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீற முடியாது.
போர் குற்றங்களில் ஈடுபட்ட கதாநாயகர்களைக் காட்டிக் கொடுக்க முடியாது என்று கூறும் இந்த அரசு தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் கைதிகள் வேறு, போர்க் குற்றவாளிகள் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றால் அது வெறும் பகல் கனவாகவே முடியும் என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றேன்.- என்றார்.
இந்த விடயத்தில் எந்தப் பேரத்துக்கும் தமிழர் தரப்புத் தயாராக இல்லை. போர்க் குற்றவாளி களைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது வெறும் பகல் கனவே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இதைக் கூறுகின்றேன்.
இவ்வாறு ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்தார்.
ரெலோ அமைப்பின் மத்திய குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வை.எம்.சி. மண்டபத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,
–
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உள்நாட்டிலும், புலம்பெர் நாட்டுத் தரப்புகளாலும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக இந்தப் பிரச்சினை தீவிர நிலையை எட்டியுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த போரில் இராணுவத்தாலும், துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக, மனித உரிமைகளுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்று கூறப்படும் போர் குற்றவாளிகளையும், அரசியல் கைதிகளையும் இணைத்து ஒரு யோசனையை மைத்திரிபால சிறிசேன முன்வைக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத் தேவை எமக்கு உள்ளது.
நாம் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த விடயத்தில் நாம் எந்தச் சமரசத்துக்கும் போகமாட்டோம். மிகவும் கெட்டித்தனமாக – இராஜதந்திர ரீதியில் போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசு இந்த யோசனையை முன்வைக்கும்போது தமிழ் இனம் முழுமூச்சாக அதை எதிர்க்கும்.
போர்க் குற்ற விசாரணை நடந்தேயாக வேண்டும்.நாம் அரசமைப்புத் திருத்தத்திலும் பல முக்கிய விடயங்களை வலியுறுத்தி வருகின்றோம். வடக்கு, கிழக்கு சுயாட்சி, உயர் அதிகாரங்கள் என்பவற்றைக் கோருகின்றோம். சம உரிமையுடனான தீர்வை வலியுறுத்துகின்றோம். நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீற முடியாது.
போர் குற்றங்களில் ஈடுபட்ட கதாநாயகர்களைக் காட்டிக் கொடுக்க முடியாது என்று கூறும் இந்த அரசு தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் கைதிகள் வேறு, போர்க் குற்றவாளிகள் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றால் அது வெறும் பகல் கனவாகவே முடியும் என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றேன்.- என்றார்.
கருத்துகள் இல்லை