மடுவில் வறட்சி தாண்டவம்!
மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் வறட்சியால் கிணறுகள் பல வற்றியுள்ளன. அவற்றுள் குப்பைகள், சருகுகள்தான் காணப்படுகின்றன. பயிர்கள் வாடியும் காய்ந்தும் அழிந்துகொண்டிருக்கின்றன என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.
மடு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பாலன்பிட்டி தொடங்கி கீரிசுட்டான இரண இலுப்பக்குளம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு குளங்கள் மட்டுமன்றி பெரிய குளங்களும் தண்ணீரின்றி உள்ளன. கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் நிலம் தெரிய வறண்டு போயுள்ளன. அதனால் பிரதேச மக்கள் குடிப்பதற்கும், பிற பாவனைக்கும் தண்ணீர் வசதி இல்லாது அவதிப்படுகின்றனர்.
வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கும், பழ வகை, மரம் செடிகள் போன்றவற்றுக்கும் தண்ணீர் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக் காணிகளிலும் காணப்படும் மரங்கள், செடிகள் நெருப்பில் எரிக்கப்பட்டவை போன்று காட்சியளிக்கின்றன.
சென்ற வருடம் பரிசு பெற்ற வீட்டுத்தோட்டங்கள் இந்த வருடம் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறன என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வீட்டுக்கு வீடு அதிக தூரம் காணப்படுவதால் நீர்த் தாங்கிகள் மூலமாகத் தண்ணீர் தருவதைவிடுத்துக் குழாய்க் கிணற்று வசதிகளை ஏற்படுத்தினால் குடிதண்ணீருடன் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
“வறட்சியால் மன்னார் மாவட்டத்தில் மடுபிரதேச மக்கள்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனா். வறட்சி நிவாரணம் மிக விரைவில் மக்களுக்கு வழங்கப்படும்” என்று மடு பிரதேச செயலாளர் ஜெயகரன் தெரிவித்தார்.
மடு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பாலன்பிட்டி தொடங்கி கீரிசுட்டான இரண இலுப்பக்குளம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு குளங்கள் மட்டுமன்றி பெரிய குளங்களும் தண்ணீரின்றி உள்ளன. கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் நிலம் தெரிய வறண்டு போயுள்ளன. அதனால் பிரதேச மக்கள் குடிப்பதற்கும், பிற பாவனைக்கும் தண்ணீர் வசதி இல்லாது அவதிப்படுகின்றனர்.
வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கும், பழ வகை, மரம் செடிகள் போன்றவற்றுக்கும் தண்ணீர் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக் காணிகளிலும் காணப்படும் மரங்கள், செடிகள் நெருப்பில் எரிக்கப்பட்டவை போன்று காட்சியளிக்கின்றன.
சென்ற வருடம் பரிசு பெற்ற வீட்டுத்தோட்டங்கள் இந்த வருடம் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறன என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வீட்டுக்கு வீடு அதிக தூரம் காணப்படுவதால் நீர்த் தாங்கிகள் மூலமாகத் தண்ணீர் தருவதைவிடுத்துக் குழாய்க் கிணற்று வசதிகளை ஏற்படுத்தினால் குடிதண்ணீருடன் எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
“வறட்சியால் மன்னார் மாவட்டத்தில் மடுபிரதேச மக்கள்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனா். வறட்சி நிவாரணம் மிக விரைவில் மக்களுக்கு வழங்கப்படும்” என்று மடு பிரதேச செயலாளர் ஜெயகரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை