கொலைச் சதி விவகாரத்தை திசை திருப்ப- இந்தியா முயற்சி!
அரச தலைவர் மற்றும் கோத்தபாய ராஜபக்ச கொலைச் சதித் திட்டத்தை அரசு சாதாரணமாக எடுக்கக் கூடாது. நாட்டின் தேசியத் தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு விசாரணையைத் திசை திருப்பும் திட்டமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-;
அரச தலைவர் மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்யச் சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டபோதும், அது தொடர்பாக அசமந்தப் போக்கே காணப்படுகின்றது.
இந்தச் சதித் திட்டத்தின் பின்புலத்தில் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அரசியல் பின்னணி இருக்குமாக இருந்தால் இவ்வாறு கொண்டு செல்ல முடியாது.
இந்தச் சதித் திட்டம் தொடர்பான விசாரணையில் எவ்வாறான முடிவுகள் வெளிவரும் என்ற அச்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் உள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா பொலிஸ்மா அதிபரின் நெருங்கிய நண்பராக இருக்கின்றார்.
பொலிஸ் மா அதிபர் தலைமை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றார். அதனால் கொலைச் சதித் திட்டம் தொடர்பில் சாதாரணமாகக் கருதாமல் பரந்தளவிலான விசாரணைகளை மேற்கொள்வது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதாகும்.
சதித்திட்டம் தொடர்பாக முறையான விசாரணை இடம்பெற்றால் தலைமை அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் சிக்கிக்கொ ள்வார்கள். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த அறிவிப்பும் விசாரணையை திசை திருப்பும் செயலாகவும் இருக்கலாம். அதனால் கொலைச் சதித்திட்டம் தொடர்பான விசாரணை முறையாக இடம்பெறவேண்டுமாக இருந்தால் சட்டம் ஒழுங்கு அமைச்சை விசாரணை முடிவுக்கு வரும்வரைக்கேனும் அரச தலைவர் தனக்கு கீழ் கொண்டுவரவேண்டும் – என்றார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது-;
அரச தலைவர் மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்யச் சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டபோதும், அது தொடர்பாக அசமந்தப் போக்கே காணப்படுகின்றது.
இந்தச் சதித் திட்டத்தின் பின்புலத்தில் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அரசியல் பின்னணி இருக்குமாக இருந்தால் இவ்வாறு கொண்டு செல்ல முடியாது.
இந்தச் சதித் திட்டம் தொடர்பான விசாரணையில் எவ்வாறான முடிவுகள் வெளிவரும் என்ற அச்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் உள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா பொலிஸ்மா அதிபரின் நெருங்கிய நண்பராக இருக்கின்றார்.
பொலிஸ் மா அதிபர் தலைமை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றார். அதனால் கொலைச் சதித் திட்டம் தொடர்பில் சாதாரணமாகக் கருதாமல் பரந்தளவிலான விசாரணைகளை மேற்கொள்வது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதாகும்.
சதித்திட்டம் தொடர்பாக முறையான விசாரணை இடம்பெற்றால் தலைமை அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் சிக்கிக்கொ ள்வார்கள். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த அறிவிப்பும் விசாரணையை திசை திருப்பும் செயலாகவும் இருக்கலாம். அதனால் கொலைச் சதித்திட்டம் தொடர்பான விசாரணை முறையாக இடம்பெறவேண்டுமாக இருந்தால் சட்டம் ஒழுங்கு அமைச்சை விசாரணை முடிவுக்கு வரும்வரைக்கேனும் அரச தலைவர் தனக்கு கீழ் கொண்டுவரவேண்டும் – என்றார்.
கருத்துகள் இல்லை