முப்படையினரின் உள்ளகத் தகவலை – மறைக்க முயலும் மைத்திரி
கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்துக்குத் தேவைப்படும் முப்படையினரின் உள்ளகத் தகவல்களை வழங்க வேண்டாம் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முதன்மைச் சந்தேகநபரைக் காப்பாற்றிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ரவி விஜயகுணவர்தன முன்னிலையே, அரச தலைவர் மைத்திரிபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கொழும்பில் உள்ள அரச தலைவரின் இல்லத்தில் அண்மையில் நடந்த கலந்துரையாடலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரட்ன, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர், முப்படைத் தளபதிகள், அரச புலனாய்வு சேவைகளின் பிரதானி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு பிரதானி, பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானி, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகியோர் தாக்கப்பட்டமை மற்றும் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் படையினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸாருக்கு, விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தின் உள்ளக தகவல்கள் தேவைப்படுகிறது. இது குறித்து நீதிமன்றங்களுக்குத் தெரியப்படுத்திய பின்னர், நீதிமன்றங்கள் விவரங்களை வழங்குமாறு படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
பல்வேறு காரணங்களைக் கூறி, தகவல்களை படைத் தளபதிகள் வழங்கவில்லை. இந்தத் தகவல்களை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவத் தளபதிக்கு கடிதத்தையும் அனுப்பியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், பொலிஸார், பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரத்னவிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தத் தகவல்களை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரச தலைவர் தனது அதிருப்தியை பொலிஸ்மா அதிபரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அதிகாரிகள் சாட்சியங்கள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரிடம் வாக்குமூலங்கள் கூட பெறப்படவில்லை எனவும் அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள பொலிஸ்மா அதிபர், நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமையவே இராணுவத்தினரிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சிலரிடம் பல முறை வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
எவரும் வெறுமனே கைது செய்யப்படவில்லை எனவும் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று திருப்தியடைய கூடிய தகவல்கள் கிடைத்துள்ளமை காரணமாகவே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர், அரச தலைவரிடம் கூறியுள்ளார்.
#srilanka #tamilnews #maithiri #army
மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முதன்மைச் சந்தேகநபரைக் காப்பாற்றிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ரவி விஜயகுணவர்தன முன்னிலையே, அரச தலைவர் மைத்திரிபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கொழும்பில் உள்ள அரச தலைவரின் இல்லத்தில் அண்மையில் நடந்த கலந்துரையாடலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில், பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரட்ன, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர், முப்படைத் தளபதிகள், அரச புலனாய்வு சேவைகளின் பிரதானி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு பிரதானி, பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானி, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகியோர் தாக்கப்பட்டமை மற்றும் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் படையினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸாருக்கு, விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இராணுவத்தின் உள்ளக தகவல்கள் தேவைப்படுகிறது. இது குறித்து நீதிமன்றங்களுக்குத் தெரியப்படுத்திய பின்னர், நீதிமன்றங்கள் விவரங்களை வழங்குமாறு படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
பல்வேறு காரணங்களைக் கூறி, தகவல்களை படைத் தளபதிகள் வழங்கவில்லை. இந்தத் தகவல்களை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவத் தளபதிக்கு கடிதத்தையும் அனுப்பியிருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், பொலிஸார், பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரத்னவிடமும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தத் தகவல்களை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரச தலைவர் தனது அதிருப்தியை பொலிஸ்மா அதிபரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த அதிகாரிகள் சாட்சியங்கள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரிடம் வாக்குமூலங்கள் கூட பெறப்படவில்லை எனவும் அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள பொலிஸ்மா அதிபர், நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமையவே இராணுவத்தினரிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சிலரிடம் பல முறை வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
எவரும் வெறுமனே கைது செய்யப்படவில்லை எனவும் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று திருப்தியடைய கூடிய தகவல்கள் கிடைத்துள்ளமை காரணமாகவே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர், அரச தலைவரிடம் கூறியுள்ளார்.
#srilanka #tamilnews #maithiri #army
கருத்துகள் இல்லை