பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன்- இராணுவத் தளபதி சந்திப்பு!

பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்
அதிகாரிகளுடன், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.
பாகிஸ்தான் இராணுவ காலாற்படை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அபித் ரபீக் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை இராணுவ காலாட் படையணியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான, பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளை வரவேற்றார்.
இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க ஒருமைப்பாடு தொடர்பான விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.