சம்பள உயர்வு கோரி போராட்டம்!

தோட்ட தொழிலாளர்களின் அதிகரிக்குமாறு கோரி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் ஆரம்பமான போராட்ட பேரணி, தலவாக்கலை கொத்மலை வீதி ஊடாக தலவாக்கலை நகரசபை மைதானம் வரை சென்றடைந்தது.

நியாயமான சம்பள உயர்வு கோரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெற்ற இந்த போராட்டத்திற்கு தலவாக்கலை நகரவாசிகள் தங்களது வியாபார ஸ்தலங்களை மூடி ஆதரவு வழங்கியிருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தோட்டப்பகுதிகளின் தொழிலாளர்களும், ஆசிரியர்கள், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன், குறித்த போராட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பலரும் கொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.