சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

நாடாமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்டு இது வரையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமல் உள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி ) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சட்ட விரோதமானதாகும். நாடாளுமன்றம் மற்றும் பொது மக்களை ஏமாற்றியே இந்த சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எமது நாட்டின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.