யாப்பில் இல்லாத இன்றைய கூட்டாட்சியின் எமது விரிவாக்கம்!!
இன்றைய பேருரைக்கான தலையங்கம் சமஷ்டி பற்றியது. இந்தச் சொல் பெடரல் என்கின்ற ஆங்கிலச் சொல்
லைக் குறிக்கிறதாகத் தமிழிலே பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் அது வடமொழி சார்ந்த ஒரு சொல்லாகும். பொருத்தமான தமிழ்ச் சொல் இல்லையென்றாலும் கூட்டாட்சி அல்லது இணைப்பாட்சி என்ற சொற்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
சமஷ்டியைத் தனது அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் சில வருடங்களுக்கு முன்னர் எமது யாப்பிலே காணப்படும் வட சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றியபோது சமஷ்டியை இணைப்பாட்சி என்று மாற்றியிருந்தோம். இந்த மாற்றத்தை எமது கொள்கையில் ஏற்படுத்திய மாற்றமாகக் குற்றம் சுமத்தி, பிரிவினையைக் கோருவதாகச் சொல்லி, எமக்கெதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விவரங்களை நான் பின்னர் எடுத்துக் கூறுவேன். ஆனால் தற்போதைக்கு இந்த உரையில் சமஷ்டி என்ற சொற் பாவனையையே நான் பயன்படுத்தப் போகிறேன்.
சமஷ்டியைக் கொள்கையாகக் கொண்ட ஒரே அரசியல் கட்சி இலங்கை தமிழ் அரசுச் கட்சி. ஆனால் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுடைய அடிப்படைக் கொள்கையாக அது இன்று பரிணமித்திருக்கிறது. எழுபது வருடச் சுதந்திரச் சரித்திரத்தில் பல்வேறு தமிழ்க் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்துக் கட்சிகளும் இன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாப்பில் உள்ள கொள்கையே தமது கொள்கையென்று ஏற்றுக்கொண்டுள்ளன. இப்படியான சந்தர்ப்பத்தில் சமஷ்டி ஆட்சி முறை என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டியது இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய கடமையென்று நான் கருதுகிறேன்.
துல்லிய வரைவிலக்கணம் இல்லை
சமஷ்டி என்ற அரசியல் கோட்பாட்டுக்கு குறித்த வொரு வரைவிலக்கணத்தைக் கொடுப்பது இயலாத விடயம். துல்லியமான குறித்த வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதனுடைய வரையறைகளையும், விரிவாக்கத்தை யும் சற்று விளக்கமாக முன்வைப்பதே இந்தப் பேருரையின் நோக்கமாகும்.
சமஷ்டி என்ற அரசியல் கோட்பாட்டுக்கு குறித்த வொரு வரைவிலக்கணத்தைக் கொடுப்பது இயலாத விடயம். துல்லியமான குறித்த வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதனுடைய வரையறைகளையும், விரிவாக்கத்தை யும் சற்று விளக்கமாக முன்வைப்பதே இந்தப் பேருரையின் நோக்கமாகும்.
சமஷ்டி ஆட்சிமுறை இருப்பதாகக் கூறப்படுகிற ஏதேனும் இரண்டு நாடுகளுடைய ஆட்சிமுறைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகக் காணமுடியாது. ஆனாலும் சமஷ்டியினுடைய சில அடிப்படைப் பண்பியல்புகள் ஒருகுறித்த நாட்டின் ஆட்சி முறையில் இருக்கின்றதா, இல்லையா? என்று பரிசீலித்துப் பார்க்க முடியும். ‘ஏவி டைசி’ என்கின்ற மிகப் பிரபலமான அரசியல் அறிவியலாளருடைய கருத்துப்படி சமஷ்டி என்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கும், பிராந்தியங் கள், அரச அதிகாரங்களைக் கையாள்வதற்கும் இடையிலான நடுநிலையைப் பேணுகின்ற ஓர் அரசியல் ஒழுங்கமைபாகும். அவருடைய கருத்துப்படி சமஷ்டியின் அடிப்படைக் குணாதிசங்களாவன:-
1. அரசமைப்புச் சட்டத்தினுடைய மீயுயர் தன்மை
2. வெவ்வேறு அரச அதிகாரங்களைச் சமமானதும் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிப்பது
3. அரசமைப்புச் சட்டத்துக்கான வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுதல் என்பனவாகும்
இதேபோன்று வெயாரி என்கின்ற அறிஞரின் கூற்றுப்படி சமஷ்டி அரசமைப்பு என்பது அரசின் வெவ்வேறு மட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் அதிகாரங்களின் மீது அவை ஒவ்வொன்றும் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.
2. வெவ்வேறு அரச அதிகாரங்களைச் சமமானதும் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்குப் பகிர்ந்தளிப்பது
3. அரசமைப்புச் சட்டத்துக்கான வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுதல் என்பனவாகும்
இதேபோன்று வெயாரி என்கின்ற அறிஞரின் கூற்றுப்படி சமஷ்டி அரசமைப்பு என்பது அரசின் வெவ்வேறு மட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் அதிகாரங்களின் மீது அவை ஒவ்வொன்றும் முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.
ரொனால்ட் வட்ஸ், பொதுவான அரசும் பிராந்திய சுயாட்சி அலகுகளும் ஆட்சியதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை என்று சமஷ்டியை வர்ணித்திருக்கின்றார். இவர் சமஷ்டி என்பது, அதிகார அலகுகள் ஒன்றிலிருந்து மற்றது தன்னுடைய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளாமல் நேரடியாகவே அரசமைப்புச் சட்டத்திலிருந்து இறை மையின் அடிப்படையில் பெற்றிருக்க வேண்டுமெனக் கருத்துரைத்திருக்கிறார்.
வட்ஸினுடைய சமஷ்டிக் கோட்பாட்டை எமது அரசமைப்புச் சட்ட நிபுணர் ரொஹான் எதிரிசின்க பின்வரும் கூறுகளாகக் காண்பித்திருக்கிறார்
1. குடிமக்கள் மீது நேரடியாக அதிகாரம் செலுத்தும் தகைமையுள்ள இரண்டு அரச அமைவுகள்: சில சுயாதீனங்களை உள்ளடக்கிய சட்டவாக்கங்கள் மற்றும் நிறைவேற்றதிகாரங்களையும் நிதி வளங்களையும் இவ்விரு அரச அமைவுகளிடையே சட்டபூர்வமாகப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முறைமை.
2. மத்திய கொள்கை வகுப்பு நிறுவனங்க ளில் பிராந்தியங்களின் அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ளுதல். இது மத்தியிலிருக்கும் இரண்டாம் (மேல்) சபைக்கு பிராந்தியங்கள் அல்லது மாகாணங்கள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம் செயற்படுத்தலாம்.
3. ஓர் எழுதப்பட்ட, தன்னிச்சையாக மாற்றப்படமுடியாத மீயுயர் அரசமைப்புச் சட்டம்
4. மத்திக்கும் மாகாணங்களுக்குமிடையிலான சர்ச்சைகளைத் தீர்க்கும் ஒரு நடுநிலையாளர்
5. மத்தியும் மாகாணங்களும் சேர்ந்து கையாளுகின்ற பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை
2. மத்திய கொள்கை வகுப்பு நிறுவனங்க ளில் பிராந்தியங்களின் அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ளுதல். இது மத்தியிலிருக்கும் இரண்டாம் (மேல்) சபைக்கு பிராந்தியங்கள் அல்லது மாகாணங்கள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம் செயற்படுத்தலாம்.
3. ஓர் எழுதப்பட்ட, தன்னிச்சையாக மாற்றப்படமுடியாத மீயுயர் அரசமைப்புச் சட்டம்
4. மத்திக்கும் மாகாணங்களுக்குமிடையிலான சர்ச்சைகளைத் தீர்க்கும் ஒரு நடுநிலையாளர்
5. மத்தியும் மாகாணங்களும் சேர்ந்து கையாளுகின்ற பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை
13ஆம் திருத்தச் சட்டம்
இந்தக் குணாதிசயங்களின் அடிப்படையில்தான் 13ஆம் திருத்தச்சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளைத் தன்னுடைய பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
13ஆம் அரசமைப்புத் திருத்தம் 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்தத் திருத்தம் இலங்கையின் ஆட்சி முறையை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி ஆட்சிமுறைக்கு மாற்றிவிடுமென்று குற்றஞ்சாட்டிப் பலர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
13ஆம் அரசமைப்புத் திருத்தம் 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்தத் திருத்தம் இலங்கையின் ஆட்சி முறையை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி ஆட்சிமுறைக்கு மாற்றிவிடுமென்று குற்றஞ்சாட்டிப் பலர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரை இலங்கையை ஓர் ஒற்றையாட்சி முறையென்று வர்ணித்திருக்கின்ற காரணத்தால், பொது வாக்கெடுப்பில்லாமல் 13ஆம் திருத்தத்தை நிறைவேற்ற முடியாதென்பது அவர்களுடைய வாதம். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றக் குழாமில் ஒன்பது நீதியரசர்கள் இருந்தார்கள். அதில் நால்வர் 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிமுறையை மீறவில்லையென்று தீர்ப்பளித்தார்கள். வேறு நால்வர் 13ஆம் திருத்தம் இலங்கையினுடைய அரசமைப்பை ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்டி முறைக்கு மாற்றிவிடுமென்ற சாரப்படத் தீர்ப்பளித்தார்கள். ஒன்பதாவது நீதியரசரான பாரிந்த ரணசிங்க 13ஆம் திருத்தத்திலிருந்த இரண்டு பிரிவுகளைச் சுட்டிக்காட்டி அவை மாற்றப்படாவிட்டால் பொது வாக்கெடுப்பு அவசியமெனத் தீர்ப்பளித்தார்.
அந்த இரண்டு பிரிவுகளையும் மாற்றியமைத்த காரணத்தால் தான் 13ஆம் திருத்தம் பொது வாக்கெடுப்பில்லாமல் நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. மாகாண நிரலிலுள்ள விடயமொன்று சம்பந்தமாக மாகாணமொன்றின் இணக்கமில்லாமல் மத்தி சட்டமியற்றினால் அந்தச் சட்டம் அந்தக் குறித்த மாகாணத்துக்குப் பொருந்தாது என்கின்ற ஏற்பாடே மாற்றியமைக்கப்பட்டு அப்படியான சந்தர்ப்பத்தில் மத்தி 2/3 என்ற பெரும்பான்மையோடு அந்தச் சட்டத்தை நிறைவேற்றினால் இணங்காத மாகாணத்துக்கும் அது பொருந்துமென்கின்ற மாற்றம் செய்யப்பட்டது. ஒற்றையாட்சியின் ஒரு குணாதிசயமாகிய மத்திய நாடாளுமன்றத்தின் மீயுயர் சட்டவாக்கத் தகைமை 13ஆம் திருத்தத்துக்குக் கொண்டுவரப்பட்ட மேற்கூறிய சிறிய திருத்தத்தின் முலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணத்தால் தான் திவிநெகும திட்டத்துக்கு வட மாகாணம் இணங்கியிராத போதும் 2/3 என்ற பெரும்பான்மையோடு அது நிறைவேற்றப்பட்டு வடக்கு மாகாணம் மீதும் திணிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தின் இணக்கப்பாடு இல்லாத காரணத்தால் சாதாரண பெரும்பான்மையோடு அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட முடியாது என்கின்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கள், மாவை சேனாதிராஜாவை மனுதாரராகக் கொண்ட இரண்டு வழக்குகளூடாகப் பெறப்பட்டன.
மாகாண நிரலிலுள்ள விடயங்கள் மீது இப்படியாக மத்திய நாடாளுமன்றம் மேலாதிக்கம் செலுத்துவதைத் தவிர்ப்பது சமஷ்டியின் முதலாவது அடிப்படைக் குணாதிசயமாகக் கருதலாம். சமஷ்டியின் இரண்டாவது அடிப்படைக் குணாதிசய மாக நான் கருதுவது மாகாணத்துக்கு என்று பகிர்த்தளிக்கப்பட்ட அதிகாரத்தை ஒரு தன்னிச்சையான அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் மத்தி மீளப்பெற முடியாததாக இருத்தல் வேண்டும்.
இவ்விரண்டு அடிப்படைக் குணாதிசயங்க ளும் தற்போது நடைமுறையிலுள்ள 13ஆம் திருத்தத்தில் இல்லாத காரணத்தால் இது சமஷ்டியல்ல என்று நாம் கூறினாலும் கூட, மேற்சொன்ன நான்கு நீதியரசர்களின் கருத்துப்படி 13ஆம் திருத்தம் இலங்கை அரசமைப்பை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டிக்கு மாற்றியிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன திருத்தங்களுக்குப் பிறகு ஐந்து நீதியரசர்கள் ஒற்றையாட்சி முறை பாதிக்கப்படவில்லையெனச் சொன்ன காரணத்தால் 5/4 பெரும்பான்மையின் அடிப்படையில் இன்று நடை முறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையைப் பெயரளவில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
ஒற்றையாட்சிக் கோட்பாடு
ஒற்றையாட்சி முறை என்பது பிரிட்டனில் உருவான ஒரு கோட்பாடாகும். இது சட்டவாக்கல் அதிகாரத்தை மட்டும் மையப்படுத்தியதாகும். அதாவது மத்திய நாடாளுமன்றத்துக்கு நிகராகச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமுள்ள வேறு நிறுவனங்கள் இருக்க முடியா தென்பது அந்தக் கோட்பாட்டின் அடித்தளமாகும். எழுதப்படாத அரசமைப்பைக் கொண்ட பிரிட்டன் இன்றைக்கும் ஒற்றையாட்சியைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. அப்படியிருந்தபோதிலும் பிரிட்டனில் இன்று இருக்கும் அதிகாரப் பகிர்வின் விரிவாக்கம் எந்தச் சமஷ்டி நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கும் சளைத்ததல்ல.
ஒற்றையாட்சி முறை என்பது பிரிட்டனில் உருவான ஒரு கோட்பாடாகும். இது சட்டவாக்கல் அதிகாரத்தை மட்டும் மையப்படுத்தியதாகும். அதாவது மத்திய நாடாளுமன்றத்துக்கு நிகராகச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமுள்ள வேறு நிறுவனங்கள் இருக்க முடியா தென்பது அந்தக் கோட்பாட்டின் அடித்தளமாகும். எழுதப்படாத அரசமைப்பைக் கொண்ட பிரிட்டன் இன்றைக்கும் ஒற்றையாட்சியைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. அப்படியிருந்தபோதிலும் பிரிட்டனில் இன்று இருக்கும் அதிகாரப் பகிர்வின் விரிவாக்கம் எந்தச் சமஷ்டி நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கும் சளைத்ததல்ல.
1920ஆம் ஆண்டில் அயர்லாந்தைத் தனிநாடாகப் பிரித்துக் கொடுத்த சட்டத்திலிருந்து 1998ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்குப் பிரிந்துசெல்லும் உரித்தோடு அதிகாரப்பகிர்வைக் கொடுத்த ஸ்கொட்லாந்துச் சட்டம் வரைக்கும், ஒற்றையாட்சியின் பிரகாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டவையாகும். கோட்பாட்டளவில் இந்தச் சட்டங்களைப் பிரிட்டன் நாடாளுமன்றம் தன்னிச்சையாக நீக்கம்செய்யும் தகைமையைக் கொண்டிருந்தாலும் கூட நடைமுறையில் அது எப்போதுமே சாத்தியமற்றது. ஆதலால் பெயரளவில் ஒற்றையாட்சி முறையைப் பிரிட்டன் கொண்டிருந்தாலும், நடைமுறையில் உலகிலுள்ள பெரும்பாலான சமஷ்டி ஆட்சிமுறையை விடக் கூடுதலான சமஷ்டிக் குணாதிசயங்க ளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
ஆகவே பலர் கருதுவதைப் போல சமஷ்டி என்பது ஒற்றையாட்சிக்கு நேரெதிரான ஆட்சிமுறை என்பதை விடப் பெயரளவில் ஒற்றையாட்சி நாடுகளுக்குள்ளும் முழுமையாக ஊடுருவக்கூடியது. ஆகவே ‘இன்றைய சமஷ்டியின் விரிவாக்கத்தைப்’ பற்றிப் பேசுகிறபோது ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு முறைமையாக அதை அணுக முடியாது.
சமஷ்டி
அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டதில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்க அரசமைப்புச் சட்டம் சமஷ்டிக் கட்டமைப்பிலானதென்பதில் எவருக்குமே சந்தேகம் கிடையாது.
அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டதில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்க அரசமைப்புச் சட்டம் சமஷ்டிக் கட்டமைப்பிலானதென்பதில் எவருக்குமே சந்தேகம் கிடையாது.
பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை ஒப்பீடு செய்கின்ற தாமஸ் ஓ ஹூக்லின்னு டைய புத்தகத்தில் கீழ்க் காணும் குறிப்புகளையும் காணலாம்.
ஸ்பெய்ன் நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் சமஷ்டியென்று பெயர் குறிப்பிடப்ப டாத போதிலும் அதிகாரப்பகிர்வு அலகுகளின் சட்டவாக்கல் அதிகாரத்தை மீறித் தேசிய அரசு சட்டங்கள் இயற்ற முடியாது.
ஸ்பெய்ன் நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் சமஷ்டியென்று பெயர் குறிப்பிடப்ப டாத போதிலும் அதிகாரப்பகிர்வு அலகுகளின் சட்டவாக்கல் அதிகாரத்தை மீறித் தேசிய அரசு சட்டங்கள் இயற்ற முடியாது.
அதேபோல் மத்திய அரசு தன்னிச்சையாக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும் முடியாது. இந்த இரண்டு காரணங்களின் நிமித்தம் ஸ்பெய்ன் நாடு பெயரில் தவிர மற்றெல்லாவற்றிலும் சமஷ்டி நாடாகக் கருதப்படுகின்றது. மாறாக ஆஸ்திரியா நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் பெயரளவில் சமஷ்டி முறையென்று என்று அழைக்கப்பட்டாலும் மத்தியின் மேலாதிக்கம் மிகவும் கூடியதாகக் காணப்படுகின்றது.
எமது அண்டைய நாடான இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சி என்றோ, சமஷ்டி என்றோ பெயரிடப்படாத ஒன்று. இது முழுமையான சமஷ்டியும் அல்ல, முழுமையான ஒற்றையாட்சியும் அல்லாத இரண்டும் கலந்த ஒரு முறைமை என்று கூறப்படுகின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரைந்த அரசியல் நிர்ணய சபையின் தலைவர் அம்பேத்கார் ‘‘எமது அரசமைப்புச் சட்டம் காலச் சூழ்நிலைகளின் தேவைப்பாட்டுக்கமைய ஒற்றையாட்சியாகவும் சமஷ்டியாகவும் இருக்கக்கூடியது’’ என்று கூறியி ருக்கின்றார்.
சமஷ்டிக் குணாதிசயம்
2014ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் செயலர் என்ற வகையில் மாவை.சேனாதிராஜாவுக்கு எதிராக 6ஆம் அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைவாகத் தொடரப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி தலைமை நீதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றக் குழாமொன்றால் வழங்கப்பட்டது. பல நாடுகளினுடைய அரசமைப்பு, பல சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பிலே பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது.
2014ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் செயலர் என்ற வகையில் மாவை.சேனாதிராஜாவுக்கு எதிராக 6ஆம் அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைவாகத் தொடரப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி தலைமை நீதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றக் குழாமொன்றால் வழங்கப்பட்டது. பல நாடுகளினுடைய அரசமைப்பு, பல சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பிலே பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது.
‘நாடுகளை ஒற்றையாட்சி அல்லது சமஷ்டி என்று பெயரிடுவது தவறான அர்த்தத்தைத் தரக்கூடும். சில ஒற்றையாட்சி நாடுகள் சமஷ்டி குணாதிசயங்களோடும் சில சமஷ்டி நாடுகள் சில ஒற்றையாட்சிக் குணாதிசயங்களோடும் காணப்படலாம். ஆகையால் இறைமை, அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்பவை ஓர் ஒற்றையாட்சி அரசுக்குள் சமஷ்டி முறையிலான ஆட்சிமுறையை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.’
‘சமஷ்டி’ என்று அழைக்கப்படுகின்ற அரசமைப்புச் சட்டங்களைக் கொண்ட எல்லா நாடுகளிலேயும் சில ‘ஒற்றையாட்சி’ குணாதிசயங்கள் காணப்படும். அந்த நாடு பிளவுபடாமல் ஒரே நாடாக இருப்பதற்கான ஏற்பாடுகள் தான் அந்த ஒற்றையாட்சிக் குணாதிசயங்கள். அனால் இவற்றைக் காரணமாகக் கொண்டு அது சமஷ்டி அல்லவென்று கூறிவிட முடியாது.
இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்றுவிடாமல் எல்லா வகையான அரசமைப்பு முறைமைக ளுக்குள்ளும் விரிவாக்கம் அடைந்துள்ளது. ஆகையால் சமஷ்டியென்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஓர் ஆட்சிமுறையாக இருக்கமுடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற போது சமஷ்டியின் அடிப்படைக் குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால், அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், பெயரே கொடுக்காவிட்டாலும் அது சமஷ்டி ஆட்சி முறையாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை