கே.ஸி.ஸி.ஸி. அணி -இலகுவான வெற்றி
ஏபி விளையாட்டுக் கழகம் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி. அணி வெற்றிபெற்றது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்த ஆட்டம் இடம்பெற்றது. யூனியன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி.ஸி.ஸி. விளையாட்டுக் கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன் விளையாட்டுக் கழக அணி 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஆகிசன் 35 ஓட்டங்களையும், பிரசாந்தன்; 30 ஓட்டங்களையும், சுயாந்தன் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சாம்பவன், நிமலதாஸ், கஜானன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.
181 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணி 18.4 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 3 இலக்குகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
அதிகபட்சமாக ஜெயறூபன் 90 ஓட்டங்களையும், ஜனுதாஸ் 44 ஓட்டங்களையும், பானுயன் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில்; ரகுபதி, மோகன்ராஜ், சுயாந்தன் ஆகியோர் தலா ஓர் இலக்கை வீழ்த்தினர். சிறந்த வீரனாக கே.ஸி.ஸி.ஸி. அணியின் ஜெயறூபன் தெரிவானர்.
கருத்துகள் இல்லை