அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்தெழுங்கள்; அல் – கொய்தா
அமெரிக்காவுக்கு எதிராக மேலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அல் –கொய்தா தீவிர
வாத குழுவின் தலைவர் அய்மான் அல் ஸவாஹ்ரி அந்தத் தீவிரவாத குழுவின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான 9/11தாக்குதல் ஞாபகார்த்த தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளிக் காட்சியிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாத்தின் மத ரீதியான எதிரியாக அமெரிக்கா உள்ளதாக குறிப்பிட்ட அவர், உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக போரை பிரகடனம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
அவர் அந்த 30 நிமிட காணொளிக் காட்சியில் நேரடியாக காணொளிப்படக் கருவியை நோக்கியவாறு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு இடமாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம் அமெரிக்கா மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதை நியாயஸ்தம் செய்வதாகவுள்ளதாக ஸவாஹ்ரி கூறினார்.
அல் – கொய்தா தீவிரவாத குழுவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு அமெரிக்க விசேட படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை அல் ஸவாஹ்ரி ஏற்றார்.
இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொளிக்காட்சியில் அல் ஸவாஹ்ரி, முஸ்லிம்களின் முதலாவது எதிரியாக அமெரிக்கா உள்ளது என வலியுறுத்தியுள்ளார்
#U.S.A #tamilnews
கருத்துகள் இல்லை