விரைவில் கண்டியிலிருந்து பேரணி!

”மக்கள் பலம் கொழும்புக்கு” என்ற போராட்டம் மீண்டும் நடக்குமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் நிலையில் மாற்றம் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமென அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போராட்டம் வெற்றிக்கரமாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை விரைவில் கண்டியியிருந்து கொழும்பு நோக்கி பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.