யாழில் முகமூடிகள் அணிந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றில் பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த பல பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடிகளை அணிந்து கொண்டு உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாகவே குறித்த வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
#kokuvil  #jaffna  #aava  #tamilnews  #srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.