மாகாணசபைத் தேர்தல் – கட்சிகளிடையே இணக்கப்பாடில்லை – மகிந்த!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகள் தங்களின் கட்சி நிலைப்பாட்டினை முன்வைக்கின்றனரே தவிர, இதுவரையில் பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவில்லை. இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு, தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எல்லை வரம்பு மீளாய்வுக் குழுவின் அறிக்கை அரச தலைவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும்.
மேலும், எவ்விதமான அழுத்தங்களுமின்றி சுயாதீனமாகவே தேர்தல் ஆணையகம் செயற்படுகின்றது. தேர்தல் திருத்தங்கள் தொடர்பில் அரசு உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டிலேயே நடத்த தயார் – என்றார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் அகிலவிராஜ் காரியவசம், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நிறுவிய குழுவானது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை அமைச்சருக்கு அறிவிக்கும். அதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்க முடியும், என்று குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன, எல்லை வரம்பு அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும்.
அனைத்துக் கட்சிகளும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம்தாழ்த்துவது அரசின் நோக்கம் அல்ல -–- என்றார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு, தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எல்லை வரம்பு மீளாய்வுக் குழுவின் அறிக்கை அரச தலைவருக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும்.
மேலும், எவ்விதமான அழுத்தங்களுமின்றி சுயாதீனமாகவே தேர்தல் ஆணையகம் செயற்படுகின்றது. தேர்தல் திருத்தங்கள் தொடர்பில் அரசு உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டிலேயே நடத்த தயார் – என்றார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் அகிலவிராஜ் காரியவசம், மாகாணசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நிறுவிய குழுவானது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை அமைச்சருக்கு அறிவிக்கும். அதன் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்க முடியும், என்று குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன, எல்லை வரம்பு அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும்.
அனைத்துக் கட்சிகளும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்றன. தேர்தலை காலம்தாழ்த்துவது அரசின் நோக்கம் அல்ல -–- என்றார்.
கருத்துகள் இல்லை