அரசமைப்பு வரைவு சமர்ப்பிப்பு- டக்ளஸால் தள்ளிப் போனது!
அரசியல் நிர்ணய சபையாகக் கூடவுள்ள நாடாளுமன்றில் புதிய அரசமைப்பு வரைவு எதிர்வரும் 25 ஆம் திகதி சமர்பிக்கப்படும் என்று முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் நேற்று இடம்பெற்ற வழிநடத்தல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஒருமித்த நாடு என்பதற்குப் பதிலாக ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றமையினால், புதிய அரசமைப்பு வரைவு சமர்பிப்பு அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு தள்ளிப்போயுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற வழிநடத்தல் குழுக் கூட்டத்தில், புதிய அரசமைப்புக்கான வரைவு அரசியல் நிர்ணய சபையாக ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி கூடும் நாடாளுமன்ற அமர்வில் சமர்பிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக ஒக்ரோபர் மாதம் 11ஆம் திகதி வழிநடத்தல் குழுக் கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. வழிநடத்தல் குழுக் கூட்டத்தில், புதிய அரசமைப்பு வரைவின் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆவணங்களை ஆராய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு நேற்று பி.ப. 2 மணிக்கு கூடியது. சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டம் இடம்பெற்றது.
நாட்டின் தன்மை தொடர்பில், ஏக்கிய ராஜ்ஜியஃஒருமித்த நாடு என்று வரைவில் கூறப்பட்டுள்ளது. ஒருமித்த நாடு என்ற சொல் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஒற்றையாட்சி என்ற சொல் இருக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதே கருத்தை முன்னரும் கூறியுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அப்படியானால் நாடு பிளவடைவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இல்லை என்று டக்ளஸ் பதிலளித்துள்ளார்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள் ஒருமித்த நாடு என்ற சொல்லுக்குப் பதிலாக ஒருநாடு என்ற சொல்லைப் பயன்படுத்துமாறுதான் கூறினீர்கள். ஒற்றையாட்சி என்பதைச் சொல்லவில்லை.
ஒருமித்த நாடா அல்லது ஒரு நாடா, எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் வழிநடத்தல் குழுவின் தமிழ் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உங்களைத் தவிர ஏனையோர் ஒருமித்த நாடு என்ற சொல்லைப் பயன்படுத்துமாறே வாக்களித்தார்கள். அதனடிப்படையில் ஒருமித்த நாடு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது, என்றார்.
யாரோ உங்களை குழப்பச் சொல்லி அனுப்பியிருக்கின்றார்கள் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சரி ஒருநாடு என்று வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அப்படிப் பயன்படுத்த முடியாது. அவர் ஒருவர் சொல்வதற்காக அப்படி மாற்ற முடியாது என்று சத்தமாகக் கூறியுள்ளார்.
ஒருநாடு அல்லது ஒற்றையாட்சி என்ற அவரது கருத்தை, அறிக்கையின் பின்னிணைப்பாக வேண்டுமானால் குறித்துக் கொள்ளலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழப்பங்கள் காரணமாக ஒருமித்த நாடு மற்றும் ஒருநாடு இரண்டினதும் தமிழ் விளக்கங்களை ஆராயவேண்டும் என்றும், அரசமைப்பு வரைவு நகலை முழுமையாகப் படித்து முடிக்க நேரம் போதவில்லை என்றும் மகிந்த அணியினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வழிநடத்தல் குழுக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவது என்றும், நவம்பர் 7ஆம் திகதி அரசியல் நிர்ணயசபையாகக் கூடும் நாடாளுமன்றுக்குச் சமர்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழிநடத்தல் குழுக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகவே வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நேற்று இடம்பெற்ற வழிநடத்தல் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஒருமித்த நாடு என்பதற்குப் பதிலாக ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றமையினால், புதிய அரசமைப்பு வரைவு சமர்பிப்பு அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு தள்ளிப்போயுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற வழிநடத்தல் குழுக் கூட்டத்தில், புதிய அரசமைப்புக்கான வரைவு அரசியல் நிர்ணய சபையாக ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி கூடும் நாடாளுமன்ற அமர்வில் சமர்பிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக ஒக்ரோபர் மாதம் 11ஆம் திகதி வழிநடத்தல் குழுக் கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. வழிநடத்தல் குழுக் கூட்டத்தில், புதிய அரசமைப்பு வரைவின் தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆவணங்களை ஆராய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு நேற்று பி.ப. 2 மணிக்கு கூடியது. சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டம் இடம்பெற்றது.
நாட்டின் தன்மை தொடர்பில், ஏக்கிய ராஜ்ஜியஃஒருமித்த நாடு என்று வரைவில் கூறப்பட்டுள்ளது. ஒருமித்த நாடு என்ற சொல் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஒற்றையாட்சி என்ற சொல் இருக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இதே கருத்தை முன்னரும் கூறியுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அப்படியானால் நாடு பிளவடைவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இல்லை என்று டக்ளஸ் பதிலளித்துள்ளார்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள் ஒருமித்த நாடு என்ற சொல்லுக்குப் பதிலாக ஒருநாடு என்ற சொல்லைப் பயன்படுத்துமாறுதான் கூறினீர்கள். ஒற்றையாட்சி என்பதைச் சொல்லவில்லை.
ஒருமித்த நாடா அல்லது ஒரு நாடா, எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் வழிநடத்தல் குழுவின் தமிழ் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உங்களைத் தவிர ஏனையோர் ஒருமித்த நாடு என்ற சொல்லைப் பயன்படுத்துமாறே வாக்களித்தார்கள். அதனடிப்படையில் ஒருமித்த நாடு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது, என்றார்.
யாரோ உங்களை குழப்பச் சொல்லி அனுப்பியிருக்கின்றார்கள் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸைப் பார்த்துக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சரி ஒருநாடு என்று வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அப்படிப் பயன்படுத்த முடியாது. அவர் ஒருவர் சொல்வதற்காக அப்படி மாற்ற முடியாது என்று சத்தமாகக் கூறியுள்ளார்.
ஒருநாடு அல்லது ஒற்றையாட்சி என்ற அவரது கருத்தை, அறிக்கையின் பின்னிணைப்பாக வேண்டுமானால் குறித்துக் கொள்ளலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழப்பங்கள் காரணமாக ஒருமித்த நாடு மற்றும் ஒருநாடு இரண்டினதும் தமிழ் விளக்கங்களை ஆராயவேண்டும் என்றும், அரசமைப்பு வரைவு நகலை முழுமையாகப் படித்து முடிக்க நேரம் போதவில்லை என்றும் மகிந்த அணியினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வழிநடத்தல் குழுக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவது என்றும், நவம்பர் 7ஆம் திகதி அரசியல் நிர்ணயசபையாகக் கூடும் நாடாளுமன்றுக்குச் சமர்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழிநடத்தல் குழுக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகவே வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை