தெற்காசியாவிற்கான ஏற்றுமதிகளை இலங்கை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்!- உலக வங்கி!

வர்த்தக தடைகளை வெற்றிகரமாக தாண்டமுடியுமாயின் தெற்காசிய பிராந்தியத்திற்குள்ளான வர்த்தகத்தை 23 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க முடியும் என உலகவங்கியின் புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்ட ‘பாதி நிறைந்த கண்ணாடிப் பாத்திரம்: தெற்காசியாவில் பிராந்திய வர்த்தகத்திற்கான நல்வாய்ப்புக்கள்’ என்ற அறிக்கை, எல்லைப் பகுதியில் காணப்படும் வரித் திரிபுகள், தீர்வையற்ற தடைகள், இணைப்பிற்கான செலவுகள் மற்றும் நம்பிக்கைப் பற்றாக்குறை ஆகிய பிராந்திய வர்த்தகத்திற்கு காணப்படுகின்ற நான்கு முக்கியமான தடைகளை கோடிட்டுக்காண்பிப்பதுடன் அவற்றிற்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குகின்றது.


பிராந்தியத்திற்குள் அதிகரிக்கின்ற வர்த்தகமானது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் பல்விதமான பொருட்கள் மற்றும் சேவைகளை அதிகமான அளவில் கிடைக்க வழிகோலும். அத்துடன், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் உள்ளீடுகளை மேலும் சிறப்பாகப் பெற்றுக்கொள்ளவும் அதிகரித்த முதலீடு மற்றும் ஏற்றுமதி பல்வகைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கும் வழிகோலும்.

உலகில் மிகவேகமாக வளர்ச்சிகண்டுவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குகின்றது. அத்தோடு உலகில் மிகக் குறைவாக ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியமாகவும் அது விளங்குகின்றது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வர்த்தகத் தடைகளானது சர்வதேச இணைப்பை பாதித்துள்ளதுடன் தெற்காசிய நாடுகள் அவை அடையக்கூடிய உயர்ந்தபட்ச சாத்தியக்கூறுகளை அடைவதைத் தடுத்துள்ளன. கிழக்காசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறும் 50 வீதமான வர்த்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, தெற்காசியாவிற்குள்  இடம்பெறுகின்ற வர்த்தகமானது வெறுமனே 5 சதவீதம் மாத்திரமேயாகும். தெற்காசியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி உலகளாவிய ரீதியான அதன் ஏற்றுமதியில் வெறுமனே 11 சதவீதமாகும்.


மேலும் ‘வர்த்தகத் தடைகளை அகற்றி மேம்பட்ட இணைப்புக்காக முதலீடுசெய்யுமிடத்து இலங்கை நிதியியல் ரீதியாக நன்மைபெற முடியும் என்பதுடன் அதன் சேவைத்துறையையும் மனித வளங்களையும் மேம்படுத்த முடியும் என்பதற்கு சான்றுகள் உள்ளன’ என இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் கலாநிதி ஐடா ஸ்வராய் ரிடிகொவ் தெரிவித்தார்.


இதுவரையில் தென்னாசியாவின் வர்த்தகம் குறித்து ஆய்வுகள் வர்த்தகத்திற்கான தடைகள் குறித்து உயர்மட்ட கண்ணோட்டத்துடனேயே ஆராய்ந்;துள்ளன.எனினும் இவ்வாறான வழிகாட்டுதல்கள் தென்னாசியா கொள்கைரீதியான முக்கிய தடைகளை அகற்றுவதற்கான தூண்டுதல்களை வழங்கவில்லை.
நாங்கள் இன்று ஆராயவுள்ள அறிக்கையில் உலக வங்கி வர்த்தகத்திற்கான நான்கு முக்கிய தடைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.கொள்கை வகுப்பாளர்களிற்கு பயனளிக்கக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதே இதன் நோக்கம். இந்த விடயம் தொடர்பாக காணப்படுகின்ற பெருமளவு எண்ணிக்கையிலான ஆய்வுகளை கருத்தில் கொள்ளும்போது இந்த அறிக்கை பங்கு கொள்ளும் பொருளாதாரங்களின் மீதான சாதகமான தாக்கத்தை அதிகரிக்கும் அதேவேளை எதிர்மறையான தாக்கம் குறித்து அக்கறை செலுத்தியவாறு  தாராளமயப்படுத்தலை எவ்வாறு செய்வது என்பது குறித்து கவனம் செலுத்துகின்றது – என்ன செய்வது என்பதற்கப்பால் இந்த அறிக்கை சென்றுள்ளதுடன் எவ்வாறு செய்வது என்பது குறித்து கவனம் செலுத்தகின்றது.
கிழக்காசியாவில் வர்த்தகம் குறித்து  அதிகளவு வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்றியதன் காரணமாக அனேக நாடுகள் நன்மையடைந்துள்ளதையும் இதன்காரணமாக பேண்தகு வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் அதிகரித்துள்ளதையும் காண்பிக்கும் பல ஆய்வு தரவுகள், அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையர்கள் பிராந்திய வர்த்தகம் மற்றும் தொடர்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும் ஏனென்றால், குறைந்த விலையில் பொருட்கள் சேவைகளை பெறுவதன் காரணமாக சாதகமான பலாபலன்களை  அடையலாம்.வர்த்தக சமூகம் பாரிய முன்னோக்கி சென்றுகொண்டிருக்கும் தென்னாசிய சந்தையினை சென்றடைவதற்கான சந்தர்ப்பத்தை பெறலாம்.” எனத் தெரிவித்தார்.
தீர்வைகளுக்கு மேலதீகமாக விமான நிலைய துறைமுக அபிவிருத்தி வரிகள் மற்றும் செஸ் வரி போன்ற துணைத் தீர்வைகள் ஏற்றுமதிகளுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்குகின்றன. துணைத் தீர்வைகள் இலங்கையில் சராசரியாகக் காணப்படும் இறக்குமதிக்கான தீர்வைகளை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக்குகின்றன. மேலும் 44 சதவீதமான இலங்கையின் இறக்குமதிகளுக்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் சலுகைகள் வழங்கப்படவில்லை.

‘இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் தாராளமயமாக்கல் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளுக்கான முக்கியமான உதாரணமாக விளங்குகின்றது’ என உலக வங்கியின் முதன்மை பொருளியலாளரும் அறிக்கையின் பிரதான எழுத்தாளருமான சஞ்ஜய் கதுரியா தெரிவித்தார். ‘பிராந்தியத்தின் சிக்கலான வரலாறு அளவில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நம்பிக்கை பற்றாக்குறை ஆகியன படிப்படியாக கொள்கை மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காண்பிக்கின்றன’

இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படைக்கையின் உணர்வுபூர்வமான பட்டியல்கள் மற்றும் துணைத் தீர்வைகள் ஆகியவற்றை இலக்கு வைத்துள்ளதுடன் அதனை நோக்கிய உண்மையான முன்னேற்றத்திற்கு வழிகோலுகின்றன. தீர்வையற்ற தடைகள் தகவல் ஊடுகடத்தப்படல் மீதான அவதானம், செயன்முறைகள் மற்றும் உட்கட்டுமானம் போன்றவற்றவற்றில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பதற்கு பன்முகப்படுத்தப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இந்த அறிக்கை கோரிநிற்கின்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.