யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் அனந்திக்கு அனுமதியில்லை!

வடமாகாண அமைச்சர் அனந்தியின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்திற்கு யாழ்.மாநகரசபை தடை விதித்துள்ளார்.குறித்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடாத்த அனந்தி இடமொதுக்கி தரக்கோரியிருந்தார்.

எனினும் அரசியல் நிகழ்வுகளிற்கு மண்டபத்தை ஒதுக்கி தரமுடியாதிருப்பதாக யாழ்.மாநகர ஆணையாளர் இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.இதனையடுத்து அனந்தியின் கட்சி அங்குரார்;ப்பண நிகழ்வு தடைப்பட்டுப்போயுள்ளது.

தற்போது தமிழரசு;கட்சியின் வசமிருக்கின்ற யாழ்.மாநகரசபையின் ஆளுகையின் கீழேயே யாழ்.பொதுநூலகம் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



#அனந்தி  #தமிழரசு;கட்சி  #யாழ்.மாநகரசபை  #யாழ்.பொதுநூலகம்  #யாழ்  #jaffna  #annathi  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.