வடமராட்சி கிழக்கில் பொதுமக்களின் வயல்நிலங்களை அபகரிக்கும் வன­ஜீ­வ­ரா­சி­கள் !

வட­ம­ராட்சி கிழக்­கில் வயல் நிலங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் தமது நிலத்தை கால­போக நெற்­செய்­கைக்­காக உழு­த ­போது அந்­தப் பிர­தே­சம் தமது ஆளு­கைப் பகுதி என்று தெரி­வித்து வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம் தடை­ வி­தித்­துள்­ளது.
முல்­லைத்­தீவு, வவு­னியா மாவட்­டங்­க­ளில் தமிழ் மக்­க­ளின் விவ­சா­யக் காணி­கள் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தால் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்று தொடர்ச்­சி­யா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டு­ வ­ரும் நிலை­யில் தற்­போது யாழ்ப்­பா­ணத்­தி­லும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம் விவ­சாய நட­ வ­டிக்­கை­க­ளுக்­குத் தடை விதித்­துள்­ளது.
1938ஆம் ஆண்டு வர்த்தமானி அறி­வித்­த­லின் பிர­கா­ரம் 18 ஆயி­ரம் ஏக்­கர் நிலங்­களை வைத்­தி­ருந்த வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம் போருக்­குப் பின்பு மக்­க­ளுக்கோ,மாவட்­டச் செய­ல­ருக்­குக் கூட எந்­தத் தக­வ­லை­யும் வழங்­காது இர­க­சி­ய­மான முனை­யில் 48 ஆயி­ரம் ஏக்­கரை தமக்­குச் சொந்­த­மான காணி­க­ளாக அறி­வித்­துள்­ளது.
வட­ம­ராட்சி கிழக்கு, வெற்­றி­லைக் கேணி, நிச்­சி­ய­வெட்டை, போக்­க­றுப்பு, சுண்­டிக்­கு­ளம் பகு­தி­க­ளில் உள்ள 6 ஆயி­ரம் ஏக்­கர் வயல்­நி­லங்­க­ளில் மக்­கள் நெற்­ப­யிர்ச் செய்கை கடந்த காலங்­க­ளில் மேற்­கொண்டு வந்­த­னர். வழமை போன்று இந்த ஆண்­டும், விவ­சா­யி­கள் தமது வயல் நிலங்­க­ளில் நெல் விதைப்­பி­லும், நெல் விதைத்­த­வர்­கள் வயல் வேலி­க­ளை­யும் அடைத்­துக் கொண்­டி­ருந்த போது திடீ­ரென, மூன்று தினங்­க­ளுக்கு முன்­னர் அந்­தப் பகு­திக்கு வந்த வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­கள அதி­க­ரி­கள், மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறு பணித்­துள்­ள­னர். இந்­தத் திடீர் பணிப்­புரை கார­ண­மாக நெற்­செய்கை மேற்­கொள்ள முடி­யாத நிலமை ஏற்­பட்­டுள்­ளது.
தமது தேவை­க­ளுக்­காக பனம் மட்­டை­க­ளைக்­கூட தமது சொந்­தக் காணி­க­ளில் பொறுக்க முடி­யா­துள்­ளது என்­றும் மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இத­னை­விட, சுண்­டிக்­கு­ளம் நன்­னீர் ஏரி­யில் இறால் மற்­றும் மீன்­பிடி மேற்­கொள்­ள­வும் தடை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.
மக்­க­ளின் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­க­னி­டம் கேட்­ட­போது, சுண்­டிக்­கு­ளத்தை அண்­டிய பகு­தி­க­ளில் உள்ள தனி­யார் காணி­க­ளோடு இணைந்த நிலப்­ப­ரப்­பையே வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யது. உட­ன­டி­யாக பிர­தேச செய­லர் சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளத்­து­டன் தொடர்பு கொண்டு நில­மையை ஆராய்ந்­தார். அங்­குள்ள உறு­திக் காணி­க­ளி­லும் இது­வரை கால­மும் நீண்­ட­கா­ல­மாக விதைப்பு மேற்­கொண்ட நிலங்­க­ளி­லும் விவ­சா­யம் மேற்­கொள்ள முடி­யும் என்று இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.
இந்­தப் பகு­தி­யில் மேல­தி­க­மாக சுவீ­க­ரித்து வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழை இல்­லா­மல் செய்து பழைய அள­வில் அர­சி­தழை வெளி­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன. பழைய அள­வி­லான நிலத்தை மட்­டும் உரி­மை­கோரி எஞ்­சிய நிலத்தை விடு­விக்­கும்­போது அந்த மக்­க­ளுக்­கான வாழ்­விட நிலத்­தை­யும் வாழ்­வா­தா­ரத்­தை­யும் மேற்­கொள்ள முடி­யும். அந்த மக்­க­ளின் நிலை கருதி அதற்­கான முயற்­சி­களை மக்­கள் பிர­தி­நி­தி­க­ளு­டன் இணைந்து மாவட்­டச் செய­ல­க­மும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்­றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.