தேராவில் முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி பெயரில் ஆக்கிரமித்த இராணுவம்
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்துள்ள மதுசா முன்பள்ளி மாவணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைத்துள்ளதுடன் முன்பள்ளி விiளாட்டு திடல் அமைத்து கையளித்துள்ளார்கள்.
19.10.18 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது
முன்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் படையினரால் புனரமைக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வில் 68 ஆவது படைத்தளபதி மேஜர் ஜெனரால் பெர்னான்டோ 68 3ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் ஜெயசிங்க மற்றும் கிராம அலுவலகர் மற்றும் முன்பள்ளிகiளின் இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
மதுசா முன்பள்ளி மாணவர்கள் 35 பேருக்கும் படையினரால் புத்தக பைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை