அமெரிக்காவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 20 பேர் பலி !

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியான ஸ்கோஹரீ எனும் இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண கோஷ்டியினர் சென்ற சிறப்பு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என்றும் நியூயார்க் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான பிரஸ்மீட் ஒன்றுக்கு அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தான் முழு விவரங்களும் தெரியப்படுத்தப்படும்.

திருமண கோஷ்டியினரின் வாகனம் மலைப்பகுதியில் இருந்து கீழே வேகமாக இறங்கி வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வாகனத்தில் பயணித்தோர் மட்டுமின்றி, அப்பகுதியில் நடந்து சென்றோரும் கூட இதில் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#NewYork  #Crash   #நியூயார்க் #விபத்து #கார் #விபத்து

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.