எமது ஆட்சி இருந்திருந்தால் ஐ.நாவுக்கு பதிலடி கொடுத்திருப்போம்! - கோத்தா
எமது ஆட்சிக் காலத்தில், போர்க்குற்றச்சாட்டு சுமத்தி இராணுவ அதிகாரியை ஐ.நா. திருப்பி அனுப்பியிருக்குமானால், எங்களின் பதில் வேறு விதமாக
இருந்திருக்கும். ஐ.நா. அமைதிப் படையில் உள்ள ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் நாம் திருப்பி அழைத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
கோட்டையில் நேற்று இடம் பெற்ற எலிய அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்வாறு கூறியுள்ளார். 'இந்த அரசு சர்வதேச சமூகத்தை வென்றிருப்பதாக கூறுவது உண்மையாயின், ஐ.நா. சமாதானப் படையில் பணியாற்றச் சென்ற இராணுவக் கட்டளைத் தளபதியை திருப்பியழைக்குமாறு விடுத்திருந்த ஐ.நாவின் அறிவிப்பை நிராகரித்துக் காட்டவேண்டும். இன்று ஐரோப்பிய நாடுகள் எமது நாட்டு இராணுவத்தினரைப் புறக்கணிக்கும் நிலமை காணப்படுகின்றது. இறுதிப் போரில் கலந்து கொண்டவர்களை அவர்கள் தங்களது நாடுகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காத ஒரு நிலமை காணப்படுபகின்றது என்றார்.
இருந்திருக்கும். ஐ.நா. அமைதிப் படையில் உள்ள ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் நாம் திருப்பி அழைத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
கோட்டையில் நேற்று இடம் பெற்ற எலிய அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்வாறு கூறியுள்ளார். 'இந்த அரசு சர்வதேச சமூகத்தை வென்றிருப்பதாக கூறுவது உண்மையாயின், ஐ.நா. சமாதானப் படையில் பணியாற்றச் சென்ற இராணுவக் கட்டளைத் தளபதியை திருப்பியழைக்குமாறு விடுத்திருந்த ஐ.நாவின் அறிவிப்பை நிராகரித்துக் காட்டவேண்டும். இன்று ஐரோப்பிய நாடுகள் எமது நாட்டு இராணுவத்தினரைப் புறக்கணிக்கும் நிலமை காணப்படுகின்றது. இறுதிப் போரில் கலந்து கொண்டவர்களை அவர்கள் தங்களது நாடுகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காத ஒரு நிலமை காணப்படுபகின்றது என்றார்.
கருத்துகள் இல்லை