வைரமுத்துவுக்கு ஆதரவாக விஜய்!

மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக பா.விஜய் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன் புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ’ (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்த் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் கவிஞர் மற்றும் நடிகர் பா.விஜய் ’மீடூ’ தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கவிதை வருமாறு:

ஒரு மீ டூ கவிதை

எழுதட்டுமா என்றேன்

மீம்ஸ் போடுவார்கள்

மிரட்டினர் நட்புகள்

மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது

ஞாயிற்றுக் கிழமை என்பதால்

மீ டூ உடன்

மீனும் சேர்ந்து கொண்டது.

மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது

மீன் 1

மீ டூ மீ டூ என்றால் என்ன?

மீன் 2 சொன்னது

மீ டூ மீ டூ என்றால்..

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

என்றானே பாரதி

அதுதான் மீ டூ

புரிந்த மீன் 1

தெளிந்து கேட்டது..

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

என்றாயே பாரதி… ஒருசில

மாதர் செய்யும் மடமையை

யார் கொளுத்துவது?

மீனிங் புரிந்த மீன் 2

இது மீ டூ பிரச்சனை என்று

மீண்டது.

இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை

-பா.விஜய்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.