யாழில் பழைய பூங்கா வளாகத்திலிருந்து பழமையான மரம் சாய்ந்தது!

 யாழ்ப்பாணத்தில் நிலவிய கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக (old park) வீதியில் உள்ள வடமாகாண மின்சார சபை காரியாலயம் முன்பாக நின்ற பாரிய மரமொன்று வீதிக்கு குறுக்காக சரிந்துவீழ்ந்ததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக யாழ் மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன். மின் இணைப்பு கம்பிகள் , தொலைபேசி இணைப்பு வயர்களும் சேதமடைந்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.