பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரிய பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.


ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியில் காலை 8 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரிய பயிலுநர்கள் கூறுகையில், “சம்பள உயர்வாக ஆயிரம் ரூபாயை கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவும், இவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆதரவு தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.