அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கையெழுத்து!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிராக மனு ஒன்று கையெழுத்து இடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.


சுகாதார அமைச்சர் வைத்திய கட்டளைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு மற்றும் மருத்துவ சபையின் நடவடிக்கைகளுக்கு அடிக்கடி தலையீடு செய்வதற்கு எதிராக இந்த மனு கையெழுத்திடப்படுவதுடன், நாடு பூராகவுமுள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளினதும் வைத்தியர்கள் கையெழுத்திடுகின்றனர்.

அனைத்து வைத்தியர்களும் கையெழுத்திடும் மனு எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.