7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

தமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.


பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக இருந்த தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். பிரசவத்துக்காக கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றார்.

அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகன்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அப்போது வயிற்றில் இருந்த குழந்தையை ஆபரேஷன் மூலம் எடுத்தால் சுகன்யாவை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது என்றும், அதற்காக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்து விடுவது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி சுகன்யாவுக்கு கடந்த 25-ந் திகதி ஆபரேஷன் செய்யப்பட்டது. 7 மாதமே ஆகி இருந்ததால் குழந்தை முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுகன்யா கடந்த 2011-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்திருந்தார். அப்போது அவருக்கு பிறந்த குழந்தை இறந்தது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பம் தரித்த அவருக்கு, குழந்தை இறந்தது சுகன்யா குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சுகன்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். தாயும், சேயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#Tamilnews  #Tamil  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.