ஐ.நா. இலங்கை தொடர்பில்கரிசனை!

இலங்கையில் ஏற்பட்டுவருகின்ற மாற்றங்கள் தொடர்பில் பெரும் கரிசனையோடு அவதானித்து வருவதாக  ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து அரசியல் யாப்புக்கு அமைவாக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் அனைத்து இலங்கையரதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையை சமாதானமாக தீர்த்துக்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.