யாழில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரர் மீது மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

யாழ். வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரையும் பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை சேர்ந்தவர்களை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு இன்று அழைத்துள்ளார்.

கடந்த வருடம் நீங்கள் தான் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தீர்கள். இந்த வருடம் நிகழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்ய கூடாது என்று ஏற்பாட்டு குழு இளைஞர்களுக்கு எச்சரித்துள்ளனர்.

இம்முறை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும் ஏற்பாட்டு குழு இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளரையும் இன்று பொறுப்பதிகாரி அழைத்து மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது என்றும் மிரட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.