விடுதலைக்கான நடை பவணியில் கிழக்கு பல்கலைகழகம் இணைந்தது!

யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகளை கடந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உணவுதவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலை மிகமோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது இவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கால் நடையாக அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு கைகோர்த்து அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகமும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.