பிரதமரின் பாதுகாவலராக சூர்யா !


சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படமும் அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படம் உருவாகி வருகின்றன.

என்.ஜி.கே. படம் பொங்கலுக்கும் கே.வி.ஆனந்த் படத்தை கோடை விடுமுறையிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடப்பதால் என்ன கதை என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

மோகன்லால் பிரதமராக நடிப்பதும் அவரது பாதுகாவலராக சூர்யா நடிப்பதும் அண்மையில் வெளியான ஒரு படம் மூலம் உறுதியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் அரசியல் படத்தில் நடிக்கும் சூர்யா அடுத்தும் அரசியல் தொடர்பான கதையில் நடிக்கிறார்.
#Suriya

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வரும் சூர்யா, பிரதமரின் பாதுகாவலராக மாறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.