வீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி?

வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவையில் எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள டிபன்
சாம்பாரை முயற்சித்துப் பாருங்கள்.
வீட்டில் டிபன் சாம்பார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :   

துவரம்பருப்பு - கால் கப்,
பாசிப்பருப்பு - கால் கப் 
தக்காளி - 2 
கேரட் - ஒன்று,
கத்திரிக்காய் - ஒன்று,
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப) 
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு 
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் 
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :   

கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன் 
வெந்தயம் - கால் டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு.



செய்முறை :   

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

துவரம்பருப்புடன் பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்க கொடுப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.

கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சூப்பரான டிபன் சாம்பார் ரெடி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.