முல்லைத்தீவு குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாட்டில் மக்கள்

முல்லைத்தீவு குமுழமுனை- தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த பொங்கல் பொங்கி, பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்காக இரண்டு பௌத்த மத துறவிகள் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சென்று பாரிய குழப்பம் ஏற்ப்பட்டதோடு இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெறுவதோடு நீதிமன்றால் பாரம்பரியமாக வழிபாடு நடத்திய மக்கள் வழிபாடுகளில் ஈடுபடவும் நீதிமன்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்புமிக்க குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும்,கிராமத்து மக்களாலும் இளைஞர்களாலும் பொங்கல் பொங்கி வழிபாடு. மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.