கிழக்குப் பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிழக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் தமது சக மாணவியின் மரணச் சடங்கிற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் கொடுக்காதமையினைக் கண்டித்து பல்லை மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக நிருவாக கட்டடத்தினை நுளைவாயிலை முற்றுகையிட்ட மாணவர்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அமர்ந்திருந்தனர்.

கடந்த 15 ஆம் திகதி கிழக்குப் பல்லைக் கழகத்தின் கலை காலாசார பீட யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்த டனியல் சில்வேவியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளரார்.

குறித்த மாணவியின் மரண வீட்டிற்குச் செல்வதற்காக கலை காலாசார பீட மாணவர்கள் பீடாதிபதி ஊடாக 16 செவ்வாய்கிழமை போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வெளிநாடு சென்றுள்ளதால் பிரதி உபவேந்தரிடம் குறித்த கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கையினை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பு தெரிவித்திருந்தது.

நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டினைக் கண்டித்தும் வருங் காலங்களில் மாணவர்களைப் பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

#tamilnews  #university  #srilanka  #batticalo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.