யாழ்.மாநகரசபை எல்லைக்குள் தங்குமிடங்களை பதிவு செய்ய உத்தரவு!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வர்த்தக அல்லது சேவை நோக்கில்

 நீண்ட காலம் மற்றும் குறுகியகால அடிப்படையில் விடுதிகள் , சிறிய விடுதிகள் , விடுதியாக பயன்படுத்தப்படும் வீடுகள் , உள்ளிட்ட தங்குமிடங்களை சபையின் நடைமுறைக்கு ஏற்பட எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

#jaffna #யாழ்.மாநகர சபை  #தங்குமிடங்களை  #இமானுவேல் ஆர்னோல்ட்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.