வவுனியா நகரசபையினால் சோலைவரி அறவீட்டு

வவுனியா நகரசபையினரால் கடந்த பல வருடங்களாக சோலை வரி பெற்றுக்கொள்ளாத வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக நகர் பகுதிகளில் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை 2018.09.06.07 இலக்க சபை தீர்மானத்திற்கு அமைய நகரசபை செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது வரை வவுனியா நகரசபைக்கு சோலை வரி நிலுவை செலுத்தப்படாதவர்களுக்கு எதிராக நகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 255 பிரிவு 170 இன் பிரகாரம் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடுக்கட்டு நடவடிக்கையாக ஆடம்பரப் பொருட்கள் கையேற்கப்பட்டு அவற்றை ஏல விற்பனை செய்வதன் மூலம் சோலை வரி நிலுவையைச்சீர் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நகரிலுள்ள பல வியாபார நிலையங்களுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#vavuniya  # நகரசபை  #சோலை_வரி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.