சுதந்திர கட்சியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்து மோதல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தமுறைபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தின்கீழ் போட்டியிடவேண்டும் என மைத்திரி அணியினரும், பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின் கீழேயே போட்டியிடவேண்டும் என மஹிந்த அணியினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், இந்த விடயத்தில் அனைத்து தரப்பின் இணக்கப்பாட்டுடன் முடிவொன்று எடுக்கப்படவேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இரு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.