பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 32 இளைஞர்கள் கைது
பிலியந்தல -கெஸ்போவ வீதியின் ஜலியகொட பகுதியில் நேற்று (10) இரவு 32 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் 14 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
பொறுப்பற்ற விதத்தில் அபாயகராமான முறையில் பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) இரவு 10 மணி முதல் இன்று (11) அதிகாலை 3 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை