நாடாளுமன்றத் தேர்தல் விவகாரம்- ஆணைக்குழு உறுப்பினர்கள் பதவியை துறப்பதற்கு முடிவு
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தொடர்ந்தும், நெருக்குவாரம் கொடுத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்
பினர்களும் பதவி துறப்பதற்கு முடிவு செய்துள்ள தாக அறியமுடிகின்றது.
பினர்களும் பதவி துறப்பதற்கு முடிவு செய்துள்ள தாக அறியமுடிகின்றது.
தமது முடிவை அரசின் உயர் மட்டங்களுக்கும் அறிவிப்பது என்று அவர்கள் நேற்றுத் தீர்மானித்துள்ளனர்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் அரசிதழ் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி நடத்தப்படும் என்றும் அரசிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரச தலைவரின் திடீர் அறிவிப்பையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், தேர்தல்கள் செயலகத்தில் நேற்று மதியம் ஆராய்ந்தனர். சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரச தலைவர் அரசமைப்புக்கு முரணாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்று ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசமைப்புக்கு முரணாக தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் பல தரப்பும் வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறுகின்றன.
உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும் என்பதை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்வதற்கும் இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை அரசமைப்;புக்கு முரணாக நடத்துமாறு பணிக்கப்பட்டால் அல்லது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் பதவி துறப்பேன் என்று ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை