காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம், பாகிஸ்தானுக்கும் வேண்டாம்: அப்ரிடி!


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி அவ்வப்போது காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்,


கடந்த சில மாதங்களுக்கு முன் 'காஷ்மீர் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றும், காஷ்மீரில் அப்பாவி மக்கள் அரசு படைகளால் சுட்டுக் கொல்லப்படுவது கவலை அளிப்பதாகவும், ஐ.நா இதில் தலையிட வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதே நேரத்தில் காஷ்மீர் இந்தியாவுடனும் இருக்க கூடாது. காஷ்மீர் தனி நாடாக இருப்பதே அப்பகுதி மக்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளார். அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.