யாழ். பண்ணையில் வெடிமருந்து துண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்தடியில்
வெடிமருந்து துண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு சென்ற பொலிஸார் நான்கு வெடிமருந்து துண்டுகளை மீட்டுள்ளனர்.
மீனவர்களின் படகுகளை நிறுத்திவைக்கும் பகுதியில் மீட்கப்பட்ட குறித்த வெடிமருந்து துண்டுகள், சீ-4 என்ற வகையென்றும், இது மீன்பிடிக்கு பயன்படுத்தப்படுவதில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எதற்காக குறித்த வெடிமருந்துகள் மறைத்துவைக்கப்பட்டன என்பது தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.