இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று டில்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.


இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டி.டி.வி. தினகரன், லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடுக்கப்பட்டு டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனுக்கு எதிராக குற்றப்பத்ரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தினகரன் மீது மோசடி, சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்ததற்கான முகாந்தரம் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

"வழக்கில் இருந்து தினகரனை விடுவிக்க முடியாது. அவர் மீதான புகாரை முழுமையாக விசாரிக்க டில்லி காவல்துறைக்கு அனுமதி அளிக்கிறோம். தினகரன் மட்டுமல்லாது சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. அதே நேரம் வழக்கில் இருந்து நத்துசிங், லலித் குமார், குல்பித்குந்த்ரா உட்பட 5 பேரை விடுவிக்கிறோம்" என்று நீதிமன்றம் வித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் டிசம்பர் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.