ஐ.தே.கவினர் கண்டியில் ஆர்ப்பாட்டம்!

நாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று முற்பகல் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சூழ்ச்சி அரசை வீட்டுக்கு விரட்டி அடித்து – நல்லாட்சியை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே அறவழிப் போராட்டம் கண்டியில் ஆரம்பமாகின்றது.
அரசமைப்புக்கு முரணான வகையில் பின்கதவால் ஆட்சிக்கு வருவதற்கு மஹிந்தவும், அவரது சகாக்களும் முயற்சிக்கின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது. ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒருமையத்தின்கீழ் கொண்டுவந்து போராடுவோம்.
அதேவேளை, தேர்தலைக் கண்டு எமது கட்சி அஞ்சவில்லை. அரசமைப்பின் பிரகாரம் அது நடைபெறவேண்டும். அப்போது தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
ஜனநாயகத்தை பாதுகாக்ககோரி 24 ஆம் திகதி கண்டியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் 27 ஆம் திகதி களுத்துறையில் நடத்தப்படும். தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் எம்முடன் கைகோர்க்கவுள்ளன“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.