தமிழாய்வு மைய வெளியீட்டில் நூல் அறிமுக விழா!

அரசறிவியலாளர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய "பூகோளவாதம் புதிய தேசியவாதம்" என்னும் நூல் அறிமுக விழா.

எதிர்வரும் 10.11.18 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அல்பேட்டன் கொமினிற்றி ஸ்கூல் (Alperton community school, Ealing Road, Wembley, HA0 4PW) அரங்கத்தில் நடைபெற உள்ளது
கடந்தகால, சமகால, எதிர்கால அறிவியல், அரசறிவியல் என பல்வேறு பரிமாணங்களை தரவுகள், தகவல்களின் அடிப்படையிலும், ஆய்வியல் அனுபவத்தினூடாகவும், வாசிப்பிற்கான இலகு நடையிலும் எழுதப்பெற்றது.
இந்நூல் தமிழ்த் தரப்பினராலும், அரசறிவியல் மாணவர்களினாலும் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்கப்படுவதையும், தமிழ்த் தலைமைகளின் ஒன்றுபட்ட அரசியல் முன்னகர்விற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இந்நூல் நோக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
தமிழாய்வு மையம் - பிரித்தானியா
07956903978,
07715925090
நன்றி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.