விமர்சித்தவர்கள் மீது வழக்கு!
துரோகி என்று ஏனையோரை விமர்சிப்பவர்கள் முதலில் தங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அமைச்சுப் பதவிக்காக விலை போவதாக என்னை விமர்சிப்பவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு
என்னை விமர்சித்தவர்கள் மீது வெகு விரைவில் வழக்குத் தொடரவுள்ளேன். இவ்வாறு கட்சி தாவிப் புதிதாகப் பிரதி அமைச்சுப் பதவியேற்றுக் கொண்ட ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சியைப் பாதுகாப்பதற்கு பதிலாக அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்வது சிறந்ததாகும்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை அமைச்சர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்காக நான் அரசுடன் இணையவில்லை. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்தப்பங்களில் எனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அவரின் செயற்பாடுகளில் திருப்தி அடைந்துள்ளேன் – என்றார்.
என்னை விமர்சித்தவர்கள் மீது வெகு விரைவில் வழக்குத் தொடரவுள்ளேன். இவ்வாறு கட்சி தாவிப் புதிதாகப் பிரதி அமைச்சுப் பதவியேற்றுக் கொண்ட ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சியைப் பாதுகாப்பதற்கு பதிலாக அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்வது சிறந்ததாகும்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை அமைச்சர் மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்காக நான் அரசுடன் இணையவில்லை. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பல்வேறு சந்தப்பங்களில் எனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அவரின் செயற்பாடுகளில் திருப்தி அடைந்துள்ளேன் – என்றார்.
கருத்துகள் இல்லை