இலங்கைக்கு பல மில்லியன் டொலர் உதவிகள் நிறுத்தம்!
இலங்கையில் அரசியல் குழப்பநிலை உருவான பின்னர் அமெரிக்காவும், ஜப்பானும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர் செய்திச்சேவை க்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தலைமை அமைச்சர் பதவியிலிருந்து என்னை நீக்கியதன் காரணமாக இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதால் ஜப்பானும் அமெரிக்காவும் பல மில்லியன் டொலர்கள் அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியுள்ளன. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் கரிசனைகள் காணப்படுகின்றன.
பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் காணி நிர்வாகத்தில் முன்னேற்றம் காணும் நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் டொலர்களை வழங்கயிருந்த அமெரிக்கா அதனை தற்போது இடைநிறுத்தியுள்ளது. தொடருந்து அபிவிருத்தி திட்டமொன்றுக்காக 1.4 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்த ஜப்பான் அதனை வழங்குவதை தற்போது இடைநிறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி எனது பெரும்பான்மையை நிரூபிப்ப தற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டங்களை எனது கட்சி விரிவாக்கவுள்ளது. நாங்கள் மாற்றுவழிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். பொதுமக்களை பெருமளவில் அணி திரட்டவுள்ளோம் -– என்றார் .
ரொய்ட்டர் செய்திச்சேவை க்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தலைமை அமைச்சர் பதவியிலிருந்து என்னை நீக்கியதன் காரணமாக இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதால் ஜப்பானும் அமெரிக்காவும் பல மில்லியன் டொலர்கள் அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியுள்ளன. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் கரிசனைகள் காணப்படுகின்றன.
பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் காணி நிர்வாகத்தில் முன்னேற்றம் காணும் நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் டொலர்களை வழங்கயிருந்த அமெரிக்கா அதனை தற்போது இடைநிறுத்தியுள்ளது. தொடருந்து அபிவிருத்தி திட்டமொன்றுக்காக 1.4 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்த ஜப்பான் அதனை வழங்குவதை தற்போது இடைநிறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி எனது பெரும்பான்மையை நிரூபிப்ப தற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் போராட்டங்களை எனது கட்சி விரிவாக்கவுள்ளது. நாங்கள் மாற்றுவழிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். பொதுமக்களை பெருமளவில் அணி திரட்டவுள்ளோம் -– என்றார் .
கருத்துகள் இல்லை